14. juli 2014

பேய் + மணிக்கூடு = 
மோதிரம்

இப்பெல்லாம் நிறைய பேய்ப்படங்கள் பார்த்து அதுபற்றிய தீவிர ஆராய்ச்சியில் இருக்கிறதால
எனது நண்பர் சொன்ன ஒரு சம்பவமும் எனக்கு நிறைய பிடிச்சுப்போயிருந்தது. அதாவதுப்பட்டது
இங்கு(நோர்வேயில்) யாரும் அனாதையாயிருந்து வயசுபோய் வயோதிபர் மடம் போனால் அவருடைய வீட்டை அரசாங்கம் எடுத்திடும். அப்படி ஒரு வீட்டுக்கு அந்த வீட்டிலை இருக்கிற பொருட்களையெல்லாம் எடுத்து எறிய எனது நண்பரை இன்னொரு நண்பர் கூட்டிப்போயிருக்கிறார். இங்கிருக்கிறதெல்லாம் எறியிற பொருட்கள்தான் ஏதாவது பிடிச்சிருந்தா எடுக்கலாம் என்று நண்பருக்கு சொல்லியிருக்கிறார்.
நண்பரும் பழைய சாமான் எனக்கெதுக்கு என்று மறுத்தாலும் ஒரு 100 வருடப் பழய ஆளுயரக்கடிகாரம் நண்பரை கவர அதையும் ஒரு தங்க மோதிரத்தையும் எடுத்திருக்கிறார். அங்கதான் ஆரம்பிச்சது பிரச்சனை. அந்த மணிக்கூடு வந்ததிலையிருந்து வீட்டிலை ஒரே சண்டை. இடைக்கிடை சண்டை வருறது சாதாரணம்தான் என்றாலும் மணிக்கூட்டுக்குப்பிறகு வீடு ஈராக் லெவலுக்கு போயிட்டுதாம். வீட்;டுக்கு வாற ஆட்களும் மணிக்கூடு நல்லாயிருக்கே எங்கை வேண்டினது எண்டு கேட்கிறதாலை அதை எறியவும் மனசில்லை. மணிக்கொருதரம் அடிக்கிற சத்தம்வேற நாரசாரமா கேட்க ஒரு மாதிரி சத்தத்ததை நிப்பாட்டினாலும் படுத்திருந்தா மணிக்கூடே கண்ணுக்குமுன்னாலை நிக்குது நித்திரையும்போச்சு. ஒரு நாள் திடீரெண்டு மணிக்கூடு ஓடுறதை நிறுத்திட்டுது அதை சரிபண்ணலாமென்டு ஒரு கதிரையில ஏறி நின்று சரிபாத்திருக்கிறார். திடீரென்டு யாரோ அடிவயித்திலை உதைஞ்சமாதிரி ஒரு வலி பத்தடி தள்ளிப்போய் விழுந்திருக்கிறார். உடனடியா எழும்பவே முடியலையாம். அம்புலன்ஸ் வந்து கொஸ்பிற்றல் போய் ஒரு வழியா திரும்ப வீட்டை வந்து நண்பரை மணிக்கூடு பற்றி விசாரிக்க அப்பதான் அவர் சொல்லியிருக்கிறார் அந்த வீட்டை இருந்தவர் செத்திட்டார் என்று. அதை முதலிலேயே சொன்னா நீ வரமாட்டாயென்டு சொல்லலையென்டு. அந்த வீட்டையிருந்தவர் ஒரு குடிகாரராம் குடிச்சே செத்திட்டாராம் இதை கேட்டதுதான் நண்பர் இந்த மணிக்கூட்டை உடனடியா கொண்டுபோய் எறிஞ்சிட்டு மோதிரத்தையும் வித்து அந்தை காசை கோயில்ல செத்தவருடைய பேருக்கு அர்ச்சனை செய்தபிறகுதான் தன்னுடைய வாழ்க்கை பழய நிலமைக்கு திரும்பியதாம். இதை நம்பலாமா? வேண்டாமா?
பேயிருக்கிறது உண்மையா?
உண்மையென்றால் உண்மை
பொய்யென்றால் பொய்
 stephen